Tuesday 19 May 2020

இந்த படைபோதுமா...

இந்த படைபோதுமா...

பாகிஸ்தான் ராணுவமோ இல்லை பாகிஸ்தான் தீவிரவாதிகளோ  இந்தியாவின் மீதோ  இந்திய ராணுவத்தின் மீது தாக்குதல் தொடுத்தால் உடனே ஐயோ என்று கையை பிசைந்து கொண்டு ஐநா சபையின் கதவை தட்டும் அளவிற்கு இந்தியா இப்போது இல்லை... ஒன்றுக்கு பத்தாக  திருப்பித் போட்டு  தாக்கும் அளவில்தான் தற்போது இந்தியா உள்ளது...

இப்போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்டெடுக்க வரிந்து கட்டிக்  கொண்டு இந்திய ராணுவம் களத்தில் இறங்கியுள்ளது. விமானந்தாங்கி கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள், அதி நவீன  போர் விமானங்கள்,சூப்பர் சோனிக் குரூஸ் ரக ஏவுகணைகள், ICBM என்று அழைக்கப்படும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் மற்றும் பீரங்கிகள், கவச வாகனங்கள் தயார் நிலையில் உள்ளது.

உங்களுக்கு தெளிவாக புரிந்துகொள்ள இந்திய ராணுவத்தின் வலிமையை விரிவாக கூறுகிறேன்.

1. விமானம் தாங்கி போர்க்கப்பல் விக்ரமாதித்யா தயார் நிலையில் உள்ளது இதிலிருந்து 50க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் புறப்பட்டுச் சென்று எதிரியின் இலக்கை தாக்கி வரலாம்.

2.கல்வாரி என்றழைக்கப்படும் ஸ்கார்பியன் வகையான நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் இன்னும் பல வகையான நீர்மூழ்கிக் கப்பல்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றன. இவை வங்காள விரிகுடா, அரபிக்கடல், இந்தியப் பெருங்கடல் என்று  சுற்றி சுற்றி வருகின்றன

.3. நாசகாரி போர்க்கப்பல்கள் என்றழைக்கப்படும் குண்டு வீசும் போர்க்கப்பல்கள் இயந்திரத் துப்பாக்கிகள் பொருத்தப்பட்ட போர்க்கப்பல்கள் ஏவுகணைகளை செலுத்தும் போர்க்கப்பல்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட போர்க்கப்பல்கள் தயார் நிலையில் உள்ளன. இவற்றிலிருந்து அணு ஆயுதங்களையும் இயக்க முடியும் அக்னி பிரித்வி பிரமோஸ்   போன்ற ஏவுகணைகளை கொண்டு எதிரிகளை தாக்க முடியும்.

4. போர் விமானங்கள்  மற்றும் அணு குண்டு அதாவது அணு ஆயுதங்களை   வீசும் விமானங்கள் மற்றும்  மின்னல் வேகத்தில் சென்று எதிரியின் இலக்கை தாக்கக்கூடிய ரஃபேல் ,சுகோய் ,தேஜஸ் ரக விமானங்கள் என ஆயிரக்கணக்கான விமானங்கள் தயாராக உள்ளது.

 5.போர் தளவாடங்களை ஏற்றிச் செல்ல சூப்பர் 130 CC ஹெர்குலஸ் விமானங்கள் மிகப்பெரிய அளவில் படைகளை நகர்த்துவதற்கு மலைப்பிரதேசங்களில் படைத்தளவாடங்களை கொண்டு செல்வதற்கும் இவை பெரிதும் உதவுகின்றன.

6.சினூக் வகை ஹெலிகாப்டர்கள் போர் தளவாடங்களையும் படைகளையும் இடம் மாற்றுவதற்கு மிக உயர்ந்த இடங்களான  மலை  பிரதேசங்களுக்கும் கொண்டு செல்ல பெரிதும் உதவியாக இருக்கின்றன.

7.அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்கள் இவை இரவிலும் எதிரியின் இலக்கை மிகத் துல்லியமாக கண்டறிந்து தாக்கும் வல்லமை படைத்தது இதிலிருந்து ஏவுகணைகளை செலுத்தமுடியும்.

8. சூர்யா ICBM ரக அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் ஏவுகணை யான இதன் தாக்கும் திறன் சுமார் 20000 கிலோமீட்டர் வரை எதிரியின்  இலக்குகளை மிக துல்லியமாக தாக்கும் சக்தி வாய்ந்தது. இது முதற்கட்ட ஆய்வில் உள்ளது .

9.அக்னி 6 வகை  அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் இது சுமார் 12 முதல் 16 கிலோமீட்டர் வரை தாக்கும் திறன் வாய்ந்தது. அக்னி-5 இது சுமார் 5 ஆயிரம் முதல் 8  ஆயிரம் கிலோ மீட்டர் வரை தாக்கும்  சக்தி வாய்ந்தது.மேலும் இந்திய ராணுவத்தில் இடம்பிடித்துள்ள அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் குறைந்த தூர ஏவுகணைகளான நாக், நிர்பயா, ஆகாஷ் ,பிருத்வி இது போன்ற இன்னும் பல ஏவுகணைகள் முப்படைகளிலும் இடம் பெற்றுள்ளது. இந்த ஏவுகணைகள் கப்பலிலிருந்தும் விமானங்களிலிருந்தும் நீர்மூழ்கி கப்பல்களில் இருந்தும்  எதிரிகளின் இலக்குகளை மிக துல்லியமாக  தாக்கும் வல்லமை பெற்றது. மேலும் இதை சாலை மார்க்கமாகவும் எடுத்துச்செல்ல முடியும். மேலும் இந்த ஏவுகணைகளை எந்த இடத்தில் இருந்தும் செலுத்தும் வல்லமை பெற்றுள்ளன.

10. S.400 ஏவுகணைகள் மற்றும் விமானங்களை தடுத்து அழிக்கும் உலகின் தலை சிறந்த வான் தடுப்பு சாதனங்கள்.

11. Advanced Air Defence System இந்திய வான்வெளி பாதுகாப்பு அமைப்பு.

12. எதிரி நாட்டு சாட்டிலைட்டை  தாக்கி அழிக்கும்  ஏவுகணை தொழில்நுட்பம்.

இத்தகைய நவீன ஆயுதங்களை கொண்டும் ராஜதந்திர முறையிலும் இந்திய நாட்டின் இறையாண்மையை காக்கவும் இழந்த மண்ணை மீட்கவும் #இந்தியபேரரசு எதற்கும் தயாராக உள்ளது.

🌹🌹🌹🌹🇮🇳ஜெய்ஹிந்த்🇮🇳🌹

பகிரவும் இந்தியாவின் வலிமையை அனைவரும் அறியட்டும்.Best regards,