Tuesday 12 May 2020

சீர்மரபினர் நல வாரியம்

சீர்மரபினர் நல வாரியம்
அமைப்புச் சாரா தொழிலாளர்களுக்கு, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறையின் கீழ் இயங்கி வரும் நல வாரியங்களில் வழங்கப்படுவதைப்போல் சீர்மரபினர் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள உறுப்பினர்களுக்கு கீழ்காணும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.
மேற்படி நலத்திட்ட உதவிகளைப் பெற இவ்வாரியத்தில் உறுப்பினர்களாக பதிவு செய்துள்ளவர்கள் அந்தந்த மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை அணுகி, உரிய படிவத்தில் பூர்த்தி செய்து, உரிய அத்தாட்சிகளுடன் விண்ணப்பம் செய்ய வேண்டும்.
1) விபத்து ஈட்டுறுதி திட்டத்தின் கீழ் விபத்தினால் மரணம்
ஏற்பட்டால் உதவித்தொகை
1,00,000/-
விபத்தினால் ஊனம் ஏற்பட்டால்
ஊனத்தின் தன்மைக்கேற்ப
10,000/- to 1,00,000/-

2) இயற்கை மரணத்திற்கான உதவித்தொகை 15000/-

3) ஈமச்சடங்கு செலவிற்கான உதவித்தொகை 2000/-

4) கல்வி உதவித் தொகை
பத்தாம் வகுப்பு படித்து வரும் பெண் குழந்தைகளுக்கு 1000/-
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு 1000/-
11ஆம் வகுப்பு படித்து வரும் பெண் குழந்தைக்கு1000/-
12ஆம் வகுப்பு படித்து வரும் பெண் குழந்தைக்கு1500/-
12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு1500/-
முறையான பட்டப்படிப்பிற்கு 1500/-
மாணவர் இல்ல வசதியுடன் முறையான பட்டப்படிப்பிற்கு 1750/-
முறையான பட்ட மேற்படிப்புக்கு 4000/-
மாணவர் இல்ல வசதியுடன் முறையான பட்ட மேற்படிப்புக்கு 5000/-
தொழிற்கல்வி பட்ட படிப்புக்கு 4000/-
மாணவர் இல்ல வசதியுடன் தொழிற் கல்வி பட்டபடிப்புக்கு 6000/-
தொழிற்கல்வி பட்ட மேற்படிப்பிற்கு 6000/-
மாணவர் இல்ல வசதியுடன் தொழிற் கல்வி பட்ட மேற்படிப்பிற்கு 8000/-
ஐ.டி.ஐ அல்லது தொழிற்பயிற்சி படிப்பிற்கு
1000/-
மாணவர் இல்ல வசதியுடன் ஐ.டி.ஐ அல்லது தொழிற்பயிற்சி படிப்பிற்கு
1200/-
5)திருமண உதவித் தொகை 2000/-
6) மகப்பேறு உதவித் தொகை:
மகப்பேறு: மாதம் ஒன்றுக்கு ரூ.1000/- வீதம் 6 மாதங்களுக்கு 6000/-
கருச்சிதைவு: கருக்கலைப்பு 3000/-
7) மூக்குக் கண்ணாடி செலவுத் தொகையை ஈடு செய்தல் Upto 500/-
8) முதியோர் ஓய்வூதியம் மாதந்தோறும் 1000/-Best regards,