Saturday 2 May 2020

எல்லா உலக நாடுகளும் சீனாவை ஓரங்கட்டிவிட்டால் - சீனாவின் பொருளாதாரம் படுத்துவிட்டால் - எப்படி இருக்கும்?

எல்லா உலக நாடுகளும் சீனாவை ஓரங்கட்டிவிட்டால் - சீனாவின் பொருளாதாரம் படுத்துவிட்டால் - எப்படி இருக்கும்?

ஆங்கிலத்தில் ஒரு சொற்றொடர் கூறுவார்கள். You can like me!, you can hate me!, but you can never ignore me. இதன் தமிழாக்கம் நீங்கள் என்னை விரும்பலாம்!அல்லது வெறுக்கலாம் !ஆனால் என்னை தவிர்க்க இயலாது. இதுதான் சீனா. இங்கு நாம் கோபத்தினால் சீன பொருட்களை அனைத்து தேசங்களும் தடை செய்ய வேண்டும் என்று கூறலாம் ஆனால் இது எத்தனை தூரம் சாத்தியம் என்று இப்பொழுது பார்க்கலாம்.

கீழ்வரும் அட்டவணையில் சைனாவிலிருந்து முக்கியமான 15 நாடுகளுக்கு ஏற்றுமதியாகும் பொருட்களின் சதவிகிதம் மற்றும் அதன் மதிப்பை பார்ப்போம்.

1) அமெரிக்கா: 16.8 சதவிகிதம் இதன் மதிப்பு 418.6 பில்லியன் டாலர்கள்.

2) ஹாங்காங்: 11.2 சதவிகிதம் இதன் மதிப்பு 279.6 பில்லியன் டாலர்கள்.

3) ஜப்பான்: 5.7 சதவிகிதம். இதன் மதிப்பு 143.2 பில்லியன் டாலர்கள்.

4) தென் கொரியா: 4.4 சதவிகிதம். இதன் மதிப்பு 111 பில்லியன் டாலர்கள்.

5) வியட்னாம்: 3.9 சதவிகிதம். இதன் மதிப்பு 98 பில்லியன் டாலர்கள்.

6) ஜெர்மனி: 3.2 சதவிகிதம். இதன் மதிப்பு 79.7 பில்லியன் டாலர்கள்.

7) இந்தியா: 3 சதவிகிதம். இதன் மதிப்பு 74.9 பில்லியன் டாலர்கள்.

8) நெதர்லாந்து: 3%. இதன் மதிப்பு 73.9 பில்லியன் டாலர்கள்.

9) பிரிட்டன்: 2.5 சதவிகிதம். இதன் மதிப்பு 62.3 பில்லியன் டாலர்கள்.

10) தைவான்: 2.2 சதவிகிதம். இதன் மதிப்பு 55.1 பில்லியன் டாலர்கள்.

11) சிங்கப்பூர்: 2.2 சதவிகிதம். இதன் மதிப்பு 55 பில்லியன் டாலர்கள்.

12) மலேசியா: 2.1 சதவிகிதம். இதன் மதிப்பு 52.5 பில்லியன் டாலர்கள்.

13) ரஷ்யா: 2 சதவிகிதம். இதன் மதிப்பு 49.5 பில்லியன் டாலர்கள்.

14) ஆஸ்திரேலியா: 1.9 சதவிகிதம். இதன் மதிப்பு 48.1 பில்லியன் டாலர்கள்.

15) மெக்சிகோ: 1.9 சதவிகிதம். இதன் மதிப்பு 46.4 பில்லியன் டாலர்கள்.

மேலுள்ள பதினைந்து தேசத்திற்கு தன்னுடைய ஏற்றுமதியில் 65 சதவீதத்திற்கும் அதிகமாக சைனா செய்கிறது.

இப்போது சொல்லுங்கள் சைனாவைப் விடுத்து முக்கியமாக நாடுகள் இயங்க முடியுமா என்று?

இந்தியா வருங்காலத்தில் சீனாவுக்கு மாற்றாக இருக்க முடியுமென்று பல்லோரும் நினைக்கின்றனர்! மற்றும் கூறிவருகின்றனர்.இதற்கு எத்தனை சாத்தியக்கூறுகள் உள்ளன என்று இப்போது பார்ப்போம்.

ஒரு நாட்டில் முன்னேற்றத்திற்கு முக்கியமாகக் கருதப்படுவது பல விஷயங்கள். அதிலும் மிக முக்கியமாக கருதப்படுவது இரண்டு விஷயங்கள். ஒன்று: உள்நாட்டு தரைவழி போக்குவரத்து.2: உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கப்பல் வழி போக்குவரத்து.

உற்பத்தி செய்த பொருளை எத்தனை சீக்கிரம் நாம் உரியவரிடம் எடுத்துக்கொண்டு செல்கிறோமோ அத்தனை தூரம் நமக்கு மதிப்பு கூடுகிறது. இந்தியா மற்றும் சீனாவில் இருக்கக்கூடிய எக்ஸ்பிரஸ்வே மற்றும் பெரிய சிறிய துறைமுகங்கள் பற்றி இப்பொழுது பார்க்கலாம்.

இந்தியாவில் 1642.5 கிலோமீட்டர்களுக்கு எக்ஸ்பிரஸ்வே உள்ளது.

சீனாவில் 1,42500 கிலோமீட்டர் கான எக்ஸ்பிரஸ்வே உள்ளது.

துறைமுகங்கள் என்று கணக்கில் எடுத்துக் கொண்டால் இந்தியாவில் 13 பெரிய துறைமுகங்களும் 180 சிறிய துறைமுகங்களும் உள்ளது.

சீனாவில் 34 பெரிய துறைமுகங்களும் 2000 சிறிய துறைமுகங்களும் உள்ளது.

உள்நாட்டு வர்த்தகத்திற்கும், வெளிநாட்டு வர்த்தகத்திற்கும், ஒரு பொருளை நன்றாக தயாரிப்பது ஒரு அங்கம் என்றால் அந்த பொருளை சரியான நேரத்தில் கொண்டு சேர்ப்பது இன்னொரு அங்கம்.

குஜராத்தில் இருந்து ஒரு பொருள் கோயம்புத்தூருக்கு வருகிறது என்றால் வருவதற்கு நான்கிலிருந்து ஏழு நாட்கள் வரை ஆகிறது. இதற்கான டீசல் செலவு ,ஓட்டுனர், மற்றும் கிளீனர் சம்பளம், மற்றும் டால் பீஸ், என்று எடுத்துக்கொண்டால் பொருளின் விலை எங்கேயோ சென்று விடுகிறது. இந்த பொருளை நாம் எக்ஸ்பிரஸ் வேயில் எடுத்து வந்தால் ஒன்று அல்லது ஒன்றரை நாள்களில் கொண்டுவரமுடியும்.

இந்தியா வின் போக்குவரத்தில் கப்பல் வழி போக்குவரத்து பெரிதாக எடுக்கப்படுவதில்லை.

நம்நாடு முன்னேற வேண்டும் என்ற ஒரு ஆசை மட்டும் இருந்தால் போதாது! முன்னேறுவதற்கான அனைத்து விஷயங்களையும் நாடு செய்ய வேண்டும். நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்? சென்னை சேலம் எட்டு வழி சாலை போக்குவரத்து வேண்டுமா? வேண்டாமா? என்று பல வருடங்களாக விவாதித்துக் கொண்டிருக்கிறோம்!

நாட்டின் முன்னேற்றத்திற்கு ஒரு நாட்டின் ஒரு கோடியிலிருந்து மறு கோடிக்கு பொருட்களை எடுத்துச் செல்வதற்கு இரண்டு நாட்களுக்கு மேலாக கூடாது.

வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பொருட்கள் ஒரு வாரத்திற்குள் போய் சேரவேண்டும். இவ்விஷயங்களில் சீனா மிகமிக முன்னணியில் உள்ளது.

சீன வளர்ச்சிக்கு வேறு பல காரணங்களை கீழே கொடுக்கிறேன்.

1) லஞ்சம் மிகக் குறைவு.

2) ஒரு ஊரின் பிரதிநிதியாக ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படுவது இல்லை நியமிக்கப்படுகிறார்கள்.

3) மாஸ் ப்ரொடக்ஷன் என்று சொல்லப்படும் மிக அதிகமான உற்பத்தி செய்கிறார்கள். பொருட்களின் உற்பத்தி அதிகமாகும் பொழுது, விலை தன்னால் குறையும்.

4) வேலை செய்பவர்களுக்கு படிப்பறிவு குறைவாக இருந்தாலும்,அனுபவத்தின் மூலம் சிறு இயந்திரத்திலிருந்து ஐபோன் வரை சிறப்பாக செய்கிறார்கள்.

5) அமெரிக்காவில் ஒரு மணி நேர சம்பளம் 8.5 டாலரிலிருந்து 9.5 டாலர் வரை. சீனாவில் 2.5 டாலரிலிருந்து 3.5 டாலர் வரை. வேலை செய்ய ஆட்களும் சரியாக கிடைக்கிறார்கள்.

6)மற்ற வளர்ந்த நாடுகள் எல்லாம் நான்கைந்து வருடம் ரிசர்ச் அண்ட் டெவலப்மெண்ட் செய்து ஒரு பொருளை தயாரித்து, ஆறு மாதங்களுக்கு மேல் டிரையல் செய்து பொருளை வெளியே விடுவார்கள். சைனா அப்படியல்ல. அந்தப் பொருள் சீனாவிற்கு வந்தவுடன் ரிவர்ஸ் எஞ்சினியரிங் மூலம் அந்தப் பொருளை அக்குவேறு ஆணிவேறாக பிரித்து முதலில் தயாரித்தவர் இன் விலையை விட குறைந்த விலைக்கு செய்து முடிப்பார்கள் .

7) ஒரு பொருளை தயாரிப்பதற்கான அத்தனை அடிப்படை பொருட்களும் சீனாவிலேயே கிடைப்பது அவர்களுக்கு ஒரு பெரிய பாக்கியம்.

8) மிக குறைந்த விலையில் இடம், மற்றும் மின்சாரம், கொடுப்பார்கள். மின்சாரம் மற்றும் நீர் 24 மணி நேரமும் கிடைக்கும். ஏற்றுமதி பொருட்களுக்கு சப்சிடி அதிகமாக உண்டு.

9) அவர்கள் நாணயமான யுவானை மதிப்பை இழக்க செய்து டாலருக்கான மதிப்பை கூட்டி விடுவார்கள். ஒரு ஏற்றுமதியாளர் வெளிநாட்டில் இருந்து ஒரு டாலர் கொண்டு வந்தால் அவர்களுக்கு அதிகமான யுவான் கிடைக்கும்.

10)ஒரு தொழில் தொடங்குவதற்கு ரெட் ்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்tapism என்பது மிகமிகக் குறைவு. அரசாங்கம் விதிக்கும் வரிகளும் குறைவுதான்.இப்படி ஏராளமாக சொல்லிக்கொண்டே போகலாம். ஆதலால் சைனா என்பது தவிர்க்க முடியாத சக்தி. இந்தியா இன்று முயன்றால் சைனாவின் நிலையை ஒரு 25 வருடங்கள் கழித்து அடையமுடியும் என்பதே நிதர்சன உண்மை. ்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்

உலக நாடுகளுக்கு சைனாவைப் பிடிக்கிறதோ இல்லையோ  அவர்கள் ஒரு சக்தியாக வளர்ந்து விட்டார்கள் என்பதே உண்மை.

Best regards,