Thursday 10 November 2011

சச்சின் படத்துடன் 'முழு நிர்வாணத்தில்' பூனம் பாண்டே!


ச்சின் டெண்டுல்கருக்கு வாழ்க்கையில் யாருமே தராத அதிர்ச்சியை ஒருவர் தந்துள்ளார். அவர் நிர்வாணமாக தோன்றப் போவதாக அவ்வப்போது பயமுறுத்தி வந்த பூனம் பாண்டே!

காரணம் வேறொன்றுமில்லை... இத்தனை நாள் அரை, முக்கால் நிர்வாணம் காட்டி வந்த பூனம், இப்போது முழு நிர்வாணமானகிவிட்டதுதான்!

கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிக்கு முன்பு மாடல் பூனம் பாண்டே என்றால் யார் என்று தான் அனைவரும் கேட்டார்கள். ஆனால் இந்திய அணி கோப்பையை வென்றால் வீரர்களுக்கு முன்பு நிர்வாணமாக நிற்பதாக அறிவித்ததையடுத்து பிரபலமானார்.

தற்போது பூனம் பாண்டே கையில் ஒரு விஷ்ணு படத்துடன் நிர்வாண போய் கொடுத்துள்ளார். அதை ஒரு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் நமஸ்கரிக்கிறார். அந்த விஷ்ணு படத்தை உற்றுப் பார்த்தால் முகம் சச்சினுடைது. விஷ்ணு கையில் பேட், தலையில் ஹெல்மெட், கையில் உலகக் கோப்பையை வைத்திருக்கிறார். இது மார்பிங் செய்யப்பட்ட புகைப்படம் என்று தெளிவாகத் தெரிந்தாலும் இணையத்தில் சக்கைப் போடு போடுகிறது.

மேலும் மகா விஷ்ணுவின் படத்துடன் பூணம் நிர்வாணமாக நிற்பது போன்ற இந்த மாரிபிங் படத்தின் மூலம், சுவாமியின் படத்தையும் அவமரியாதை செய்துள்ளனர்.

இந்த புகைப்படத்தைப் பார்த்துதான் சச்சின் டெண்டுல்கர் அதிர்ந்து போனார். என்னை வைத்து என்ன கூத்தெல்லாம் அடிக்கிறார்களே என்று நொந்துவிட்டார்.

படத்தைப் பார்த்த பூனம் டுவிட்டரில், "எனது ரசிகர்கள் என் மீது வைத்திருக்கும் அன்பிற்கு நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். ஆனால் இது போன்று மார்பிங் புகைப்படத்தைப் பார்த்து வருத்தப்படுகிறேன். ஏனென்றால் எனக்கு கிரிக்கெட் ஒரு மதம் மாதிரி,' என்று எழுதியுள்ளார்.

அப்போது கூட தன்னை நிர்வாணமாக புகைப்படம் வெளியிட்டதற்காக அவர் வருந்தவில்லை, கிரிகெட்டுக்காகத்தான் வருத்தப்படுகிறாராம்!