Wednesday 7 September 2011

காதல்



மறக்க முடியவில்லைக்
காதலா
உன்னை மறக்க முடியவில்லை


உன் மீது கொண்ட காதல்
என் உயிரையும் தாண்டி வாழ்கிறதே
காதலா
உன்னைக் காதல் கொண்ட நாள் முதலாய்
உனக்கே உயிராய் வாழ்கிறேனே நான்


இதயம் துடிக்க மறந்துவிட்டால்
உயிர் வாழ முடிவதில்லைக் காதலா
உந்தன் நினைவுகளை மறந்துவிட்டால்
இதயமாய்த் துடிதுடிப்பேன் நானல்லவா


நீயில்லா உறக்கத்தில் கூட உன்னைக்
காணக் கனவைக் கண்டதில்லை நான்
காதலா
உன்னோடு வாழாத உலகில் பிணமாய்
வாழும் உயிர் வேண்டாம் எனக்கு

கவி எழுதக் கற்றுக் கொடுத்த உன்
வார்தைகள் கூட இன்னும் என் காதலை
ஆழமாய் சொன்னதில்லைக் காதலா

யார் கவிக்குள்ளும் சிக்கும் வார்த்தையா நீ
காதலா
யாரலும் எழுத முடியாத காவியமல்லவா நீ