Wednesday 26 October 2011

தீபாவளி என்றால் என்ன ?.........


புராணம் கூறுவது:
1.
ஒரு காலத்தில் ஒரு அசுரன் உலகத்தை பாயாகச் சுருட்டிக் கொண்டு போய் கடலுக்குள் ஒளிந்து கொண்டான்.
2.
தேவர்களின் முறையீட்டின் மீது மகாவிஷ;ணு பன்றி அவதாரம் எடுத்துக் கடலுக்குள் புகுந்து அவனைக் கொன்று உலகத்தை மீட்டு வந்து விரித்தார்.
3.
விரித்த உலகம் அப்பன்றியுடன் கலவி செய்ய ஆசைப்பட்டது. 
4.
ஆசைக்கு இணங்கி பன்றி (விஷ;ணு) பூமியுடன் கலவி செய்தது. 
5.
அதன் பயனாக பூமி கர்ப்பமுற்று நரகாசுரன் என்ற பிள்ளையையும் பெற்றது. 
6.
அந்தப் பிள்ளை தேவர்களை வருத்தினான்.
7.
தேவர்களுக்காக விஷ;ணு நரகாசுரனுடன் போர் தொடங்கினார்.
8.
விஷ;ணுவால் அவனைக் கொல்ல முடியவில்;லை. விஷ;ணுவின் மனைவி நரகாசுரனுடன் போர் தொடுத்து அவனைக் கொன்றாள். 
9.
இதனால் தேவர்கள் மகிழ்ச்சியடைந்தார்கள்.
10.
இந்த மகிழ்ச்சி (நரகாசுரன் இறந்ததற்காக) நரகாசுரனின் இனத்தினரான திராவிட மக்கள் கொண்டாட வேண்டும்.  இராவணனையும் அரக்கனாக உருவகித்தனர்.
அரக்கன் அசுரர் எனத் திராவிட இனத்தையே சுட்டி ஆரியர்கள் தங்கள் ஆளுமையை நிலை நாட்டினர்.

இன்று நாவலந்தீவு என்று அழைக்கப்பட்ட இந்தியா பாப்பானியத்தின் ஆளுகைக்குள் அகப்பட்டுள்ளது.  தமிழர்களை சூத்திரர்கள் என்று புறக்கணிக்கும் நிலை இன்றும் இந்தியாவில் நடைமுறையில் உள்ளது.

இவ்வாறு தீபாவளிப் பண்டிகை தத்துவம் !
மேற் குறிப்பிட்ட 10 விடங்கள் தான் தீபாவளி திருநாளை தமிழரைக் கொண்டாட வைக்கிறதே தவிர வேறு என்ன யாருக்குத் தெரியும்யாராவது சொன்னார்களாஇதை ஆழ்ந்து சிந்தித்துப் பாருங்கள்.  இந்தக் கதைகளை புராணங்களை எழுதியவர்கள் ஆரியர்கள்.  இவர்களுக்கு பூமியின் வடிவம் பற்றிய அறிவே இருக்கவில்லைப் போல் தெரிகின்றது.
பூமி தட்டையா? கிடையா? உருண்டையா?
தட்டையாகவே இருந்த போதிலும் ஒருவனால் அதைப் பாயாகச் சுரட்ட முடியுமாஎங்கு நின்று கொண்டு சுருட்டுவது?

சுருட்டி கக்கத்திலா தலையிலா தூக்கிச் செல்வது?
எங்கிருந்து தூக்கிச் செல்வதுகடலில் ஒளிந்து கொள்வதாயின், கடல் அப்போது எதன் மீது இருந்தது.
விஷ;ணு மலம் உண்ணும் பன்றி உருவம் எடுக்க வேண்டிய அவசியம் என்ன?
அரக்கனைக் கொன்று பூமியை விரித்தால், பூமிக்கு பன்றி மீது காதல் ஏற்படுவானேன்?
பூமி மனித உருவமா? மிருக உருவமா? கலவியில் மனித பிள்ளை உண்டாகுமா?
பிறகு சண்டை ஏன்? கொல்லுவது ஏன்?
இதற்காக நாம் ஏன் மகிழ்ச்சியடைய வேண்டும்?
இந்த விடயங்களை கொஞ்சமாவது தீபாவளி கொண்டாடும் தமிழ்ப் புலவர்கள், அறிஞ்ர்கள், சிந்திக்க வேண்டாமாநரகாசுரன் ஊர் மாகிஷ;மகி என்ற நகரம்.  இது நர்மதை ஆற்றின் கரையில் இருக்கிறது.  மற்றொரு ஊர் பிரகித் ஜோஷ என்று சொல்லப்படுகின்றது.  இது வங்காளத்தில் விசாம மாகாணத்துக்கு அருகில் இருக்கிறது.  இந்த இடங்களை திராவிட அரசர்களே ஆண்டு வந்தார்கள் என்று வரலாறுகள் கூறுகின்றது.
வங்காளத்தில் தேவர்களும் அசுரர்களும் யாராக இருந்திருக்க முடியும்இவை ஒன்றையும் யோசிக்காமல் பார்ப்பனன் எழுதி வைத்தான் என்பதற்காகவும் சொல்கின்றான் என்பதற்காகவும் நடு இரவில் எழுந்து குளிப்பதும் புத்தாடைகள் அணிவதும் தமிழ் நாட்டில் பட்டாசு வெடிப்பதும் பார்ப்பானர்கள் கங்கா ஸ்நானம் ஆயிற்றா என்று கேட்பதும் அவர்களுக்கு கும்பிடு போடுவதும் அவன் கோயில் அர்ச்சனையில் பணத்தைப் பறித்து இடுப்பில் சொருகிக்க கொள்வதும் என்றால் இதை என்னவென்று சொல்லுவது?

சிந்தியுங்கள்! சிந்தியுங்கள்!
பார்ப்பானங்களே சிந்தியுங்கள். இன்றைய நவின உலகில் எத்தனை மாற்றங்கள்.  காலம் மாறிவிட்டது.  மக்களைச் சிந்திக் விடுங்கள்.  இந்தக் கதைகள் எழுதப்பட்ட காலத்தில் மக்களை ஏமாற்ற எழுதிய இந்தக் கற்பனைத் தடாகங்களை மூடிவிட்டு புதிய பகுத்தறிவுச் சிந்தனைகளை வளர்க்க உதவுங்கள்.  இந்தக் கதைகளை எழுதிய ஆரியர்கள் சிந்தனைகள் மனிதத்தன்மை வாய்ந்ததாகத் தெரியவில்லை.  இந்த பூச்சாண்டிக் கதைகளை தமிழர்கள் எப்படி நம்பினார்கள்.ஏன் எமது தமிழர்கள்  இப்படி மோசம் போனார்கள்ஏன் தமிழர்கள் சிந்திக்கத் தவறினார்கள்தமிழனின் அடிமை நிலை தான் காரணம் என்று சாதாரணமாகச் கூறிவிட்டுப் போகாமல் தமிழர்கள் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும்.  சிந்தித்தால் வீண் விரயங்களை தவிர்க்கலம்.  சிந்திப்பாய் தமிழா.?!