Thursday 13 October 2011

அத்தனை அழகையும்

அத்தனை அழகையும்
இத்தனை நாட்கள் நீ
எங்கடி பெண்ணே
பூட்டி வைத்தாய்?
பளிச்சிடும் விண்மீன்
சிரிப்பினை உன்னுள்
ஏனடி பெண்ணே
மறைத்து வைத்தாய்?
மின்னலை போன்ற
கண்களைக் கொண்டு
நீ ஒளியின் ஒளியை
மிஞ்சி விட்டாய்........
பேசும் மொழியினில்
மழலையாய் மாறி நீ
எப்படி என்னை
அடிமை கொண்டாய்?
என்னை இழந்தபின்
ஏனடி பெண்ணே
இன்னும் உன்னுள்
சிறை வைக்கிறாய்?
தொடரும் நினைவினில்
மௌனமாய் வந்து நீ
என் தூக்கத்தை ஏனடி
திருடிக்கொண்டாய்?
சில்மிஷம் செய்யாத
அஹிம்சையின் தோழியே
அடக்கமாய் எப்படி - என்னுள்
அடைக்கலம் கொண்டாய்?
ஆயிரம் கேள்விகள்
உன்னிடம் கேட்டும்
மௌனத்தில் ஏனடி
பதிலுரைத்தாய்?
குயிலின் இசையை
ரசிக்கத் தெரியாதவன்
உன் மௌனத்தை எப்படி
அர்த்தம் கொள்வேன்
வெகுமதியான இதயம் தந்து
நிம்மதி கெடுத்துவிட்டாய்
அன்புச் சிறையில் என்னை வைத்து
அடிமை கொண்டு விட்டாய்
சிதைந்துபோன இதயம் சேர்த்து
சிகிச்சை செய்வாயா?
மனதில் ஏற்று என்னை உந்தன்
மணவறை சேர்ப்பாயா?