Thursday 13 October 2011

காதல் கல்லறை!....

அவள் கல்வித் தேர்வை
எழுதினால் பாடசாலையில்
நான் காதல் தேர்வை எழுதினேன்
அவள் இதயச் சோலையில்!
அவள் கற்றுத் தேறினால்
மருத்துவளாக!
நான் தோற்று வாடினேன்
நோயாளியாக!
அவள் கழுத்திலோ தாலி
என் முகத்திலோ  தாடி!
என் கண்களிலோ அவளின்
சிரித்த முகம்
அவள் கண்களிலோ
தன கணவன் முகம்!
திருமணம் ஆனதால்
அவள் வயிற்றில்
வளர்ந்தது பிள்ளை!
நான் குடித்து வாடியதால்
என் வயிற்றில் வந்தது
தொல்லை!
அவள் பெற்றால்
புதிய ஆண் மலரை
நான் பெற்றேன்
புதிய கல்லறையை!
என் பெயராவது
உச்சரிக்கப்படுமா
அவள் குழந்தைக்கு!
விண்ணில் நான்
மண்ணில் அவள்!